பகத்சிங் 92வது நினைவு தின ரத்ததான முகாம்

கோவில்பட்டியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவீரர் பகத்சிங் 92-வது நினைவு தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பகத்சிங் ரத்ததான கழக கழக அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ் தலைமை தாங்கினார். அறக்கட்டளை தலைவர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார்.

இம் முகாமில் கருத்துரிமை கூட்டமைப்பு தலைவர் தமிழரசன், வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்கின், மாமன்னர் புலித்தேவர் மக்கள் நல இயக்க நிறுவன தலைவர் செல்வத்துரை, பிரபாகரன் குருதித் கொடை பாசறை நிறுவனத் தலைவர் ரவிக்குமார், மாவீரர் பகத்சிங் ரத்ததானம் கழக கழக அறக்கட்டளை செயலாளர் சண்முகராஜ்,பொருளாளர் மணிகண்டன், அதிமுக நகர செயலாளர் விஜய பாண்டியன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி, அதிமுக நிர்வாகிகள் மனோகரன், அழகர்சாமி,செல்வகுமார், குழந்தை ராஜ்,ஜெய்சிங், மற்றும் மருத்துவர் தேவசேனா,செவிலியர்கள் லட்சுமி காந்தம்,ராதா,விஜயலட்சுமி, ஆய்வுக நுட்புநர் சேவியர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.